Friday, August 22, 2008

தேசங்கள் பெண் களு க்கானவையாக இல்லை....ஆனால் பெண் களு க்கு தேசங்கள் வேண் டும் ----ஓவியா

ஏமாற்றம் சுதந்திர மனிதனாக இருக்கும் நிலையில் நம்பிக்கையோ அடிமையாக இருக்கிறது
சுதந்திர சிந்தனைக்கும் மதத்துக்குமான போராட்டமானது மிக நீண் ட வரலாறாகும். மதம் பூமி
தட்டை என்றது...... உருண் டை என்று சொன்னவர்களை அடித்துத் துரத்தியது. துரத்தப்பட்
டவர்கள் வராலாறாய் வாழ்கிறார்கள். பூமிதான் அண் ட சராசரங்களின் மய்யம் என்றது மதம்.
ஒரு முழு வெள்ளைத்தாளில் வைக்கப்படும் ஒரு புள்ளியின் இடத்தைக் கூ ட அண் ட வெளியில்
பூமி வகிக்கவில்லை என்றது அறிவியல். உண் மையைச் சொன்னவர்கள் அய்ரோப்பாவின்
மதமுறைத் தண் டனைச் சாலைகளில் அனுபவித்த கொடுமைகளை நாகரீக சமுதாயம் எழுதி
வைக்கக்கூட கூசும். மரண ம் பாவத்தின் சம்பளம் என்றது மதம். பாவம் செய்தாலும்
செய்யாவிட்டாலும் மரண ம் நிச்சயம் என்றது அறிவியல். மனிதனுக்காகதான் இறைவனால்
உலகம் படைக்கப்பட்டது என்றது மதம். மனிதன்தான் இயற்கையைப் பொருட்படுத்த வேண் டிய
நிலையில் இருக்கிறான் . இயற்கைக்கு மனிதன் ஒரு பொருட்டேயில்லை என்றது அறிவியல்.
இங்கு மனிதன் என்று மதம் சொன்னது ஆணை மட்டும்தான். ஆண் டவன் படைப்பில் அதி
அற்புதமான பிறவி மனிதன் - அது ஆண் . பெண் ணே £ பிற இயற்கை அமைப்புகளைப் போலவும்
பிற உயிரினஙக்ளைப் போலவும் இவற்றிற்கெல்லாம் பின்னாலும் கடைசியாகவும் கடவுளால்
ஆணு க்காகப் படைக்கப் பட்டவள். இப்போது அறிவியல் தொடுத்த போராட்டத்தின் தொடர்
சங்கிலியாய் மதத்தை எதிர்த்துத் திரள வேண் டியவர்கள் பெண் கள். அந்தப் போராட்டத்தில்
அடையாளம் காண ப்படுபவர்களிடம் மதம் இன்னும் குரூரமாகத்தான் நடந்து கொள்கிறது.
தஸ்லிமா இந்தப் போராட்டத்தில் சுதந்திர சிந்தனை அணி யின் இன்றைய கண் ணி யாக தன்னை
அடையாளப் படுத்துகிறார். அவர் சொல்கிறார்.
இயற்கை பெண் களை மனிதப் பிறவிகள் என்கிறது. ஆண் கள் அதனை மறுப்பதற்காக
மதங்களைப் படைத்திருக்கிறார்கள்,
மாற்றுக் கருத்துக்களு க்காக மரண தண் டனை சுமத்துவது எத்தனை கற்காலத்திலிருந்து இன்றும்
தொடர்ந்து கொண் டிருக்கிறது? இன்று தஸ்லிமாவை உயிரோடு கொளு த்த முடியவில்லை
என்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது! அந்த எண் ண ம் இன்னும் மனித சமுதாயத்திலும்
வலிமையோடு மிச்சமிருக்கிறதே! நாமெல்லாம் இருந்து என்ன பயன்? அந்த அம்மையார்
தற்சமயம் பின்வாங்கியிருக்கிறார்களே? இது நமக்கு அவமானமில்லையா?
மதத்தை மிகவும் அரள வைத்த ஒரு அறிவியல் கண் டுபிடிப்பு எது தெரியுமா? அச்சுக் கலையின்
கண் டுபிடிப்புதான். அச்சுக் கலை பரவத் தொடங்கிய காலத்தில் மதம் அவசரமாக என்ன
செய்தது தெரியுமா? அச்சுக் கலையின் சமூகப் பயன்பாடுகளைக் கண் டு மதம் மிரண் டது. துவக்க
காலத்திலிருந்து மனித அறிவின் மீது அது செலுத்தி வந்த ஆதிக்கத்தின் கருவறுத்து விடுமோ
இந்த அச்சுக்கலையும் அச்சு எந்திரங்களு ம் என்ற பயம் மதவாதிகளை பிடித்துத் தின்றது.
கடவுளு க்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்ற வார்த்தைகளை மதம் உச்சரித்த
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
பொழுதிலேயே அறிவு தனது விடுதலைக்குப் போராடத் துவங்கி விட்டது. அச்சுக் கலையோ
அறிவைத் தன் முதுகில் ஏற்றி ஊ ர்வலம் போகத் தயாராகி விட்டது. அன்று அரசன் மதத்திற்கு
முழுமையாகக் கட்டுப் பட்டிருந்தான். கத்தோலிக்க போப்பின் அதிகாரத்திற்கு முன் அரசனின்
அதிகாரம் மண் டியிட்டுதான் நின்றிருந்தது. அந்த தனது அதிகாரத்தை பயன்படுத்தி மதம் அவசர
அவசரமாக அந்த அச்சுத் துறையை தனது அதிகாரத்தின் கீழ் கொண் டு வந்தது. எந்த நூ ல்கள்
அச்சாக்கப் படவேண் டும் என்று தீர்மானிக்கிற அதிகாரத்தைத் தன்னகத்தே எடுத்துக் கொண் டது.
கி.பி. 1550-ல் நான்காம் போப் 'பால்' விலக்கி வைக்கப்பட வேண் டியவை பற்றிய
ஓர் அட்டவணை த் தொகுதியைத் தயாரிக்கும் தேர்வுநிலைக் குழு ஒன்றை
அமைத்தார். நூ ல்களையும், வெளியீடு செய்வதற்கான கையெழுத்து
பிரதிகளையும் ஆய்வு செய்து அந்நூ லை மக்கள் வாசிப்புக்கு 'அனுமதிக்கலாமா'
'கூடாதா' என்று முடிவு செய்ய வேண் டியதே அதன் பணி யாகும். அவற்றுள்
தேவலாயக் கொள்கைகளோடு உடன்பாடு உள்ள நூ ல்களில் ஒரு சில பிழைகள்
இருக்குமானால் அந்நூ ல்களைத் திருத்தம் செய்து வெளியிடுவதும் அதன் பணி யில்
அடங்கும். அதே போல், மதநிந்தனைக் கருத்துக்களை கண் டனம் செய்து தடை
அறிவிக்கும் அதிகாரத்தையும் அந்தக் குழு பெற்றிருந்தது. அது மட்டுமன்றி,
அவ்வாறு மத நிந்தனைக்குரிய நூ ல்களை நுணு கிப் படித்து அறியும் தனிப்பட்ட
சலுகையை ஒரு சில நபர்களு க்கு மட்டும் அளிக்கவும் அக் குழு அதிகாரம்
பெற்றிருந்தது. தண் டமுறை மன்றத்தை விட (மதநிந்தனையாளர்களை தண் டிக்கும்
அதிகாரம் படைத்த மதத்தின் விசாரணை மன்றம் ) இது விரிந்த அளவு அதிகாரம்
கொண் டதாக இருந்தது. ஏனெனில், அது ரோமன் கத்ததாலி'கக நம்பிக்கைகளு க்கு
மாறுபட்ட கருத்துக்களைக் கொண் ட நூ ல்களை மட்டும் தனது அதிகார
வரமபுக்குள் எடுத்துக் கொள்ளவில்லை; மாறாக, 'ஒழுக்கவியல்'. 'ஒழுங்கு,
கடமைகளைப் போதித்த நூ ல்களை, தேவாலய ஒழுங்கு விதிமுறை பற்றிய
நூ ல்களை, மற்ற சமூகத்தை பாதிக்கக்கூடிய அனைத்து நூ ல்களையும் தனது
அதிகார வரப்புக்குள் கொண் டு வந்தது. இத் தேர்வு நிலைக் குழுவின்
அட்டவணை முதலில்,' 'வாசிப்பது தடை செ ய்யப்பட்டது' அல்லது 'சட்ட
விரோதமாக்கப்ட்ட' நூ ல்களைப் பட்டியலிட்டது. பின்பு, இது போதுமானதாக
இல்லை என்று கண் டு, எவையெல்லாம் அனுமதிக்கப்படவில்லையோ
அவையெல்லாம் தடை செய்யப்பட்டது என அறிவித்தது. இது, தேவாலயத்துக்கு
உகந்ததல்லாமல் பிற அனைத்து அறிவும் மக்களைச் சென்றடையாமல் தடை
செய்ய எடுத்த கேடு கெட்ட முயற்சியாகும்.
மேற்கூறிய வார்த்தைகள் நியூயார்க்கைச் சேர்ந்த பேராசிரியருவர் (வில்லியம் டிராப்பர்)
200 வருடங்களு க்கு முன்பாக எழுதிய நூ லொன்றிலிருந்து பெறப்பட்டவையாகும். அவர்
மேலும் கூறுகிறார் இந்த நோக்கத்தில் தங்களு க்குள் அடித்துக் கொண் டிருந்த போட்டி
அமைப்புகளான கிறித்துவத்தில் இரு பிரிவுகளாகிய கத்தோலிக்கப் பிரிவிற்கும்
புராட்டஸ்டண் டு பிரிவிற்கும் எந்த வேறுபாடுமில்லை மாறாக ஒற்றுமையே நிலவியது
என்று. அந்த இரண் டு பிரிவிற்குமிடையிலிருந்த அதிகாரத்தையட்டி வேறுபட்ட
தந்திரங்களை அந்த பிரிவினர் கையாண் டனர் என்கிறார்.
இவ்வாறு, தேவாலயத்தின் இருபிரிவுகளு ம் 'புராட்டஸ்டண் டு' ‘கத்தோலிக்கர்’
இந்த ஒரு நிலைப்பாட்டில் உடன் பட்டிருந்தன. எதிலென்றால், வேதங்களு டன்
ஒத்துப் போகாத எந்த அறிவியலையும் சகித்துக் கொள்ள முடியாதென்பதில்.
கத்தோலிக்கர்கள், மய்ய அதிகாரத்தைப் பெற்றிருந்தனர். அவர்களால் தாங்கள்
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
எடுக்கும் முடிவுகளை தங்களது ஆட்சிப் பகுதிகளனைத்திலும் செயல்படுத்த
முடிந்தது. அதைப் பயன்படுத்தி மேற்கூறிய தேர்வு நிலைக் குழு மூலம் தங்களது
இந்தக் கொள்கையை அமுலாக்கினர். ஆனால், புராட்டஸ்டண் டுகளின் நிலை
மாறுபட்டது. அவர்களது செல்வாக்கு பல தேசங்களில் சிதறலாகப் பரவிக்
கிடந்தது. எனவே, அவர்களால் கத்தாலிக்கர்களைப் போன்று நேரிடையான
தீர்மானகரமான முறையில் செயல்பட முடியவில்லை. அது கடைப்பிடித்த
முறையானது குற்றவாளியின் மீது {மதநிந்தனையாளர் மீது} இறையியல்
அடிப்படையிலான பழியை உருவாக்குவதாகும்; அதனால், அப்பழிக்கு ஆளான
நபர் சமூகப் புறக்கணி ப்புக்கு ஆளாவார். இம்முறை ஒன்றும் கத்தோலிக்கர்களின்
ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திய முறையை விட குறைவான விளைவை
ஏற்படுத்தியதல்ல.
இவ்வாறு நேரிடையான அரசியல் அதிகாரம் தங்கள் கையில் இல்லாதபோது தங்கள்
மூத்த சகோதரர்கள் பினபற்றிய வழியைத்தான் இன்று தஸ்லிமா நஸ்ரீன் விசயத்தில்
இஸ்லாமிய சமயத்தவர் கையாள்கின்றனர்.
அறிவியலில் நியூட்டன் காலம் துவங்குவதற்கு முன்பு வரையில் அறிவியலுக்கு மதம்
ஏற்படுத்தி வந்த கொடுமையான தடைகளை அதன்பின் அரசியல் அதிகாரத்திலிருந்து
மதம் பிரிக்கப் பட்ட காரண த்தினால் நிறுத்திக் கொண் டது என்று கூறலாம். இன்று
மதம் அறிவியலுடன் கைகோர்த்துக் கொண் டு விட்டது. எந்த அளவுக்கு என்றால்
பண் டைய கிரேக்க அறிவிலாளரைக் கொலை செய்ததற்கு இன்றைய போப்புகள் பொது
மன்னிப்பு கேட்கிற அளவுக்கு. ஆனால் அந்த சமரசம் அறிவியலுடன் மட்டும்தான்.
அறிவியலின் தாயாகிய மனித அறிவின் கருத்து சுதந்திரத்துடன் அல்ல. அதனால்தான்
தஸ்லிமாக்களு க்கு இன்றும் இந்த நிலை.
தஸ்லிமா நஸ்ரின் வங்காளதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவப் பெண் மணி . இஸ்லாமியக்
குடும்பத்தில் பிறந்த போதிலும் கல்வியாளர் குடும்பப் பிண் ண ணி இவரை ஒரு சிந்தனையாளராக
உருவாக்கியது. ஒரு நாத்திகராக பெண் ணி யவாதியாக பரிண £மம் கொண் டார். வெறும்
தொழில் முறை வைத்தியராக வாழ்ந்து மடிவதில் முடிந்து போகாமல் ஒரு சமூக மருத்துவராக
தன்னை உண ர்ந்தார் இப் பெண் . ஒரு எழுத்தாளராக, கவிதாயினியாக, நாவலாசிரியராகப்
பன்முக பரிண £மம் எடுத்தார். இவருடைய மத எதிர்ப்பானது மதத்துக்கும்
ஆண £திக்கத்துக்குமுள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. இவருடைய
மனிதாபிமானது இஸ்லாமிய நாடான தனது தாய் நாட்டில் இஸ்லாமியல்லாதார் படும்
இன்னல்களு க்கு எதிராக இவரைக் குரல் கொடுக்க வைத்தது. இதனால் தனது தாய் நாட்டில்
இஸ்லாமிய மதகுருமார்களின் கடுமையான கோபத்துக்காளானார். அன்று தொடங்கியது
அதாவது 1994 -ல் தொடங்கியது இவருடைய கருத்துரிமைக்கான போராட்டம். குறிப்பாக
இவர் எழுதிய லஜ்ஜா என்ற நாவல் பரபரப்பான குற்றச்சாட்டுக்காளானது. இஸ்லாமிய
மதஅடிப்படைவாதிகள் இவருக்கு ‘பஃட்வா’ என்றழைக்கப்படும் மரண தண் டனையை
அறிவித்ததுடன் இவரது உயிரை எடுப்போருக்கு பரிசளிப்பது என்ற அறிவிப்பினை
வெளியிட்டனர். நமக்குக் இன்று அந்தப் பரிசுத் தொகை எட்டாயிரம் பவுண் டுகளாம். அதன்பின்
வங்காள தேச அரசு அவருடைய நூ லாகிய ‘லஜ்ஜா’விற்கு தடை விதித்ததுடன் அவரது கடவுச்
சீட்டு உரிமையையும் முடக்கிப் போட்டது. அவரைக் கொலை செய்ய வேண் டும் என்ற குரல்கள்
வலுத்தன. ஆனால் தஸ்லிமா அவையெதற்கும் அசரவேயில்லை. மாறாக, ‘ பெண் களு க்கெதிராக
இருக்கும் உங்கள் குரானை மறுவாசிப்பு செய்து திருத்தி எழுதுங்கள்’ என்று அறிவார்ந்த
துணி ச்சலுடன் தொடர்ந்து தனது கருத்துரிமையை நிலைநிறுத்தப் போராடலானார். குறிப்பாக
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
அவருடைய இந்தக் கோரிக்கையைத்தான் இஸ்லாமியர்கள் மரண வெறியுடன் அணு குகின்றனர்.
அவரைக் கொலை செய்ய வேண் டும் என்று அறிவித்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும்
எடுக்காத வங்கதேச அரசு தஸ்லிமா மீது அவதூ று வழக்கு பதிவு செய்து அவருக்கு வாரண் டு
பிறப்பித்தது. இரண் டாண் டுகள் வரை தனக்கு சிறைத் தண் டனை விதிக்கப்படலாம் என்று
எதிர்பார்த்த தஸ்லிமா அதற்கும் மேலாக சிறையிலேயே தான் கொல்லப்பட்டு விடக் கூடும் என்று
நியாய ள் கழித்து
சர்வ தேச மனித உரிமை நிறுவனங்களாகிய ‘அம்னெஸ்டி இண் டர்நேஷனல்’ மற்றும் ‘பென்’
ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் அவருக்கு பிணை யில் விடுதலையளிக்கப்பட்டு அவர்
அந்நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
முதலாவதாக அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு சுவீடன். அதன்பின் ஜெர்மன், மற்றும்
அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த விட்டு அதன்பின் இந்தியாவில் கல்கத்தாவில் குடியேறினார்.
தாய் மண் கொடூர முகங் கொண் டு நின்றாலும் உலகெங்கிலும் தஸ்லிமாவுக்கு ஆதரவுக் குரல்கள்
மேலோங்கின. அய்ரோப்பிய பாராளு மன்றம் அவருக்கு சுதந்திர சிந்தனைக்கான ‘சக்காரோவ்’
விருதினையும் இன்னும் பல விருதுகளையும் அறிவித்து பெருமைப்படுத்தியது. அவரது நூ ல்கள்
இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னும் அவரது
உயிருக்கும் இருத்தலுக்குமான போராட்டம் தொடர்கிறது. அவரது சுயசரிதையின் நான்கு
பாகங்கள் வங்காள தேச அரசால் மத நல்லிண க்கத்துக்கு ஊ று விளைவிப்பவை என்று தடை
செய்யப் பட்டிருக்கின்றன. இந்தியாவின் மேற்கு வங்க அரசும் தஸ்லிமாவின் வாழ்க்கை
வரலாற்றின் மூன்றாவது பாகத்தைத் தடை செய்திருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின்
பேரில் இந்தத் தடை விலக்கிக் கொளப்பட்டிருக்கிறது.
தனது தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்ட பிறகு மிக நீண் ட காலம் அய்ரோப்பாவில்
தங்கியிருந்த தஸ்லிமா கடந்த மூன்றாண் டுகளாகக் கல்கத்தாவில் தொடர்ந்து வசித்து வருகிறார்.
தனது தாய் நாட்டில் கொலை வெறியர்கள் அவருக்காக காத்திருக்கும் சூழலில் இந்தியாவில்
மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புகிறார் தஸ்லிமா. தனது தாய் மொழி
பேசப்படும் அந்தப் பகுதி தனது தாய் நாட்டை நினைவுபடுத்துவதாக உண ர்கிற தஸ்லிமா மேற்கு
வங்கத்திலேயே குடியுரிமை கோருகிறார். ஆனால் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளு ம்
இஸ்லாமிய விரோதியாக தஸ்லிமாவைக் கருதி அவரை இந்த மண் ணி லும் கொலை செய்ய
முற்படுவதுடன் அவர் செல்லுமிடங்களிளெல்லாம் அவரை எதிர்த்தும் தாக்கியும் செயல்பட்டு
வருகின்றனர். இந்த நிலையில் அவர் இந்தியாவை விட்டுப் போய் விட வேண் டும் என்றே இந்திய
அரசும் நினைக்கிறது.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரண £ப் முகர்ஜி நாங்கள் (இந்தியா) விருந்தினர்களை மதிக்க
விரும்புகிறோம். ஆனால் விருந்தினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண் டுமோ அப்படி நடந்து
கொள்ள வேண் டும் என்று கூறியிருக்கிறார். இந்த நாட்டின் சிறுபான்மைக் கமிசனின் தலைவர்
கமல் பாரூக் பிறர் மனதைப் புண் படுத்தும் விதமாக தஸ்லிமா எழுதக் கூ டாது என்கிறார்.
தஸ்லிமாவுக்கும் தஸ்லிமாவை ஆதரிப்பவர்களு க்கும் இவர்களது அகராதியில் மனமென்ற ஒன்றே
இருக்காது போலும். இவர்களது மக்களில் எப்போதுமே நாத்திகர்களு க்கு இடமிருப்பதில்லை.
பெரியார் கூறியது போல் மதச்சார்பின்மை என்றால் எந்த மதத்தையும் சாராதிருப்பது என்ற
பொருளிலல்லாமல் அனைத்து மதஙக்ளையும் சார்ந்து நிற்பது என்ற பொருளில் பயன்படுத்தும்
தேசமிது.
சமீபத்தில் ஹை தராபாத்தில் ஒரு நூ ல் வெளியீட்டு விழாவில் அவர் மீது தாக்குதல் நடைபெற்றது.
தாக்குதல் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து
கல்கத்தாவில் இவருக்கு எதிரான கலகங்கள் வலுவடைந்த நிலையில் தஸ்லிமா அவரது
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
விருப்பத்திற்கு மாறாக அரசாகங்த்தால் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு
மறைமுக பாதுகாப்பில் வைக்கப் பட்டிருக்கிறார். இவ்வாறு கல்கத்தாவில் தான் வாழ்ந்த
வீட்டிலிருந்து தான் அப்புறப்படுத்தப் பட்டதில் மிகுந்த வேதனையடைந்திருக்கிறார் தஸ்லிமா.
இடையில் புத்த தேவ் பட்டாச்சாரியா மேற்கு வங்க முதல்வர் (சிபிஎம்) தஸ்லிமாவை மேற்கு
வங்கத்திற்கு திரும்ப அழைப்பதாக வந்த செய்தியில் மிகவும் நெகிழ்ந்து போய் மகிழ்ச்சியுடன்
கிளம்பத் தயாரான தஸ்லிமாவை அது தவறான தகவல் என்று மீண் டும் வந்த செய்தி
துயரத்திலாழ்த்தியது.
ஒரு தனி நபர் சுதந்திரம் மட்டும்தான் தஸ்லிமாவின் விருப்பம் என்றால் அய்ரோப்பாவிலேயே
அவர் தாராளமாக நிலை ª காண் டு விடலாம். ஆனால் தஸ்லிமா தான் தோன்றிய சமூகத்தை
நேசிக்கிறார். தன் தாய் மொழியை நேசிக்கிறார். ‘நான் நலமாக இல்லை ஆனால் நான் நேசிக்கும்
என் தாய்நாடே நீ நலம் பெறுக’ என்று எழுதுகிறார். தன் தாய் மண் ணி ல் வாழ முடியாத
சோகத்தை தணி த்துக் கொள்ள அவர் மேற்கு வங்க மண் ணை நாடுகிறார். ஆனால் இந்தியா
அவருக்குக் குடியுரிமை தரத் தயாராக இல்லை. காரண ம் இந்தியாவின் இஸ்லாமிய மத
அமைப்புகள். பெண் களை பாதிக்கும் வகையில் உள்ள பகுதிகளை குரானிலிருந்து நீக்கி
அதனைத் திருத்தி எழுதுங்கள் என்ற தஸ்லிமாவின் கோரிக்கை தங்களைப் புண் படுத்துவதாகக்
கூறி அந்த எழுத்தாளர் தனது கோரிக்கையை நீக்கிக் கொள்ள வேண் டும் என்று இவர்கள்
கூறுகிறார்கள். என்ன வியப்பு பாருங்கள்! மனித சமூகத்தின் சரிபாதி பெண் ணி னத்தை
பாதிப்படைய வைக்கும் பகுதிகளை நீக்கச் சொன்னதே குற்றமாம். அது அவர்களின் மதத்தை
அவமானப் படுத்தி விட்டதாம். ஆனால் தஸ்லிமா என்ன சொல்கிறார்? உங்கள் மதத்தைப் பற்றிப்
பேச வேண் டும் என்பது எனது இலக்கல்ல. நான் எனது சமுதாயப் பெண் களைப் பற்றிப்
பேசுகிறேன்.. அவர்களு க்காகத்தான் பேசுகிறேன் என்கிறார். நான் கவனப்படுத்த விரும்பும்
விசயங்களெல்லாம் பெண் கள் உரிமைகள் , மனிதாபிமானம் மற்றும் பெண் ணி யம் இவை
மட்டுமே என்கிறார் அவர்.
மேற்கு வங்க அரசு தஸ்லிமாவின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தயாராய இல்லை.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தடை செய்யப் பட்ட அவரது சுயசரிதையின் நான்காம்
பாகமாகிய இரண் டாகப் பிரிதல் 2003 என்ற நூ லிலிருந்து
பிரச்சனைக்குரிய சில பக்கங்களை நீக்கிக் கொள்ள தஸ்லிமா முன் வந்திருக்கிறார். இந்தியாவில்
வாழ வேண் டும் என்ற அவருடைய விருப்பத்திற்கும் தேவைக்குமான விட்டுக் கொடுத்தலாக
இதனை அவர் ஏற்றுக் கொண் டுள்ளார். அதில் என்னவொரு கவனிக்கத் தக்க விசயம் என்றால்
இந்த நூ ல் ஏற்கனவே மேற்கு வங்க அரசினால் தடை செய்யப் பட்டு பின் நீதி மன்ற உத்தரவின்
வாயிலாக அந்தத் தடையானது நீக்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது. அதன்பின் இப்போது இந்த
மதவெறியர்கள் தஙக்ள் கலவரத்தின் மூலம் நீதி மன்ற உத்தரவிற்கப்பாற்பட்ட சமூகத் தடையை
விதித்திருக்கின்றனர். இதைத் தவிர இப்போதைய நிலையை சமாளிக்க வேறு வழியில்லை என்ற
முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
கம்யூனிஸ்ட்டுகள் ஆள்கின்ற மேற்கு வங்கத்தில் இப்படியரு நிலைமை மிகவும் வெட்கக்
கேடானதாகும். தஸ்லிமாவால் தங்கள் மாநில அமைதி கெடுவதாகச் சொல்ல இவர்களு க்கு
வெட்கமாக இல்லை? நந்திகிராமின் துப்பாக்கி சத்தம் நமக்குக் கேட்காமலா இருக்கிறது? சரி
அப்படியே இருந்தாலும் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்து சுதந்திரத்திற்குக்
கடமைப்பட்டவர்களில்லையா? கருத்து சுதந்திரம் என்பது கம்யூனிசம் பிறந்த கருவறை
இல்லையா? ஓட்டுகளின் எண் ணி க்கைக்கு முன்பு எல்லாமே......? ஆனால் இவ்வளவு
துன்பத்திலும் தஸ்லிமாவுக்கு நேர்மை இருக்கிறது. மோடிக்கு தாராள மனசு . தஸ்லிமாவைக்
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
காப்பாற்ற தயாராக இருக்கிறாராம். தஸ்லிமா கூறுகிறார், ‘என்னை வைத்து அரசியல்
செய்யாதீர்கள்’
ஆனால் இவ்வளவு சூழலுக்கும் அடிப்படைக் காரண ம் தஸ்லிமாவுக்கு ஆதரவான
பொதுக்கருத்தைத் திரட்ட வேண் டிய முற்போக்கு அமைப்புகளு ம் சமூக நீதிக்காக
இவ்வியக்கங்களு டன் இணை ந்து நிற்கும் மதச்சிறுபான்மை அமைப்புகளு ம் தீவிரமாகக் கூட
அல்ல குறைந்த பட்சமாகக் கூட இதில் செயல்படாததுதான். தஸ்லிமாவுக்கு ஆதரவாக
வாக்களிக்கக் கோரி ஓர் இணை ய தளம் செயல்படுகிறது. அதில் அளிக்கப்படும் வாக்குகள்
விண் ண ப்பங்கள் மய்ய அரசுக்கு அனுப்பப்படுகிறது என்று அந்த இணை ய தளம் தெரிவிக்கிறது.
அதில் என்னுடைய விண் ண ப்பத்தையும் சேர்த்து இதுவரை வந்திருக்கும் விண் ண ப்பங்கள்
மொத்தம் 1025 தான். இணை யதள முகவரி ஷ்ஷ்ஷ்.ஜீமீtவீtவீஷீஸீ ஷீஸீ றீவீஸீ மீ.நீஷீனீ.
இதனைப் பார்க்கும் போது பெண் களு க்கு தேசமில்லை என்பது உண் மைதான். ஆனால்
பெண் களு க்கு தேசங்கள் வேண் டும். தஸ்லிமாவுக்கு வங்காளம் தேவைப்படுவதைப் போல.
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
நன்றி.... தமிழ்த்தேசம் திங்களிதழ்

No comments: