Friday, August 22, 2008

என்னை ஊமையாக்க முடியாது ---------ஓவியா

நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன் ஆனால் இன்று ஒரு நாத்திகராக
வளர்ந்திருக்கிறேன். அறிவியல் பயிற்சியை நான் எடுத்த போது உற்று நோக்குதல். சோதித்தல் ஆய்வு
செய்தல் மேலும் காரண காரியங் களை அறிதல் ஆகிய பண்புகளை வளர்த்துக் கொண்டேன். காரண
காரியமின்றி எதுவும் உண்மையென ஏற்றுக் கொள்ளப் படக்கூ டாது. நான் அநீதியை எதிர்த்தும்
அறியாமையை எதிர்த்தும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான்
மதத்தின் கொடுமைகளைக் குறிப்பாக பெண்களுக்கெதிரான அநீதியையும் ஒடுக்குமுறையையும்
அடையாளங் காட்டுகிறேன்.
மனித உரிமைகளை தங் களது தலையாய நோக்கங் களாக அறிவித்திருக்கும் சில
மேற்கத்திய நாடுகள், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் மத அடிப்படைவாதத்திற்கும்
ஆதரவளித்து வருவது என்னை வியப்படைய வைக்கிறது. குறுகிய கால அரசியல் இலாபங்
களுக்காக மக்களாட்சி அரசுகள் இராணுவ சர்வாதிகாரத்தை ஒப்புக் கொள்கின்றன. மதச் சார்பற்ற
நாடுகள் எதேச்சதிகாரத்துடனும் பழமைவாதத்துடனும் நட்பு பாராட்டிக் கொள்கின்றன. ஏன் அவர்கள்
நாடுகளின் மத அடிப்படைவாதிகளின் ஒரு சிறிதும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் அவை
சகித்துக் கொள்கின்றன. மக்களாட்சி எனவும் மதச்சார்பற்ற நாடுகள் என்றும் தங் களை அழைத்துக்
கொள்கின்ற இந்த நாடுகளின் இத்தகைய இரட்டை நடைமுறைகள்தாம் மத அடிப்படைவாதிகளுக்கு
ஒருவிதமான அங்கீகாரத்தை வழங்கி விடுகின்றன. இவர்களின் வற்புறுத்தல்களுக்கு பணிந்து இந்த
அரசுகள் எழுத்தாளர்களை சிறை வைக்கவும் அவர்களுடைய நூல்களை தடை செய்யவும்
தலைப்படுகின்றனர்.
சில மேற்கத்தியர்கள் மூன்றாம் உலக நாடுகளின் அனைத்து மரபுகளுமே பெண்களுக்கு தீமை
பயப்பவையல்ல. அவை கீ ழ நாடுகளின் சமூ க அமைதிக்கும் நிலையான வாழ்க்கைக்கும் காரணிகளாக
அமைகின்றன என்று கூறகின்றனர். இக்கூற்று சுத்த முட்டாள்தனமானதாகும்.
- தஸ்லிமா

மீண்டும் மதவாதிகளால் தாக்கப்பட்டிருக்கிறார் தஸ்லிமா நஸ்ரின். ஹைதராபாத்தில் தனது நூலின்
மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் நிகழ்ச்சியையட்டி அதில் கலந்து கொள்ள சென்றிருந்த தஸ்லிமா நஸ்ரின்
எம்.அய்.எம் இயக்கத்தைச் சேர்ந்த மதவெறியர்களால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்
பட்டிருக்கிறார். இதில் அதிர்ச்சிக்குரிய மற்றொரு உண்மை என்னவென்றால் இந்த தாக்குதல் முகமது முக்ததா கான்,
சையது அகமது பாட்சா, முகமது மொசாம் கான் ஆகிய 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடந்திருக்கிறது.
இவர்கள் உடனே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவை விட்டு உடனே வெளியேறாவிட்டால் தஸ்லிமாவைக்
கொன்று விடுவோம் என்று இஸ்லாமியத் தீவிரவாதிகளும் சில மதகுருமார்களும் மிரட்டல் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
சாதியின் பேராலும் மதத்தின் பேராலும் நடக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நம்மைத் தலைகுனிய
வைக்கின்றன. 1994-ம் ஆண்டில் தனது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட தஸ்லிமாவை தொடர்ந்து மதவாதிகள்
துரத்தியே வருகின்றனர். இப்போது நடந்திருக்கும் இந்த தாக்குதலை இஸ்லாமிய கல்வியாளர்களும் சில முக்கிய
தலைவர்களும் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தாலும் இணைய தளத்தில் பொதுவாகக் கருத்து
தெரிவித்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் தஸ்லிமா மீது வெறுப்பை கக்கியிருப்பது வேதனையளிப்பதாக
இருக்கிறது. தஸ்லிமா தாக்கப்பட்டதைக் கண்டித்திருக்கும் டெல்லி சிறுபான்மை கமிசனின் தலைவர் ‘கமல் பாருக்’ அதே
நேரத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக எழுதுவதிலிருந்து தஸ்லிமா தடுக்கப்பட வேண்டும்
என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி அவருடைய விசா உடனே இரத்து செய்யப்பட்டு இந்தியாவை விட்டு
வெளியேற்றப் பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தியா அனைத்து மத உணர்வுகளுக்கும்
மதிப்பளிக்கின்ற நாடு என்று கூறியிருக்கும் அவர் எல்லா மத நல்லிணக்க வாதிகளைப் போலவே வசதியாக
நாத்திகர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மக்கள் உரிமைகளாக கணக்கில் சேர்க்கவேயில்லை. வங்க தேச மாநில
அரசு அவர் மீதான தாக்குதலைக் கண்டித்திருந்த போதிலும் அவரது நூலான திவிண்டிகோ "ஞிஷ்வீளீலீணீஸீபீவீtஷீ" (ஷிஜீறீவீt வீஸீ
ஜிஷ்ஷீ) விற்கு தடை விதித்திருந்தது. மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதாக இந்தத் தடை விதிக்கப்
பட்டது. இந்நூல் அவருடைய சுயசரிதையின் ஏழாவது பாகமாகும். இப்போது நீதிமன்ற உத்தரவின்
மூலமாக அந்தத் தடை நீக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடையானது கடந்த ஆணடு நவம்பர் 27 ம்
நாளன்று விதி க்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் சுஜாட்டோ பத்ரா ஷிuழீணீtஷீ ஙிலீணீபீக்ஷீணீ இதனை எதிர்த்து வழக்க
தொடர்ந்து இந்தத் தடையாணையை நீக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது அரசு வேறு புதிய
தடையாணையைப் பிறப்பிக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
அந்த வீரப் பெண்மணியோ, ‘என்னை உங்களால் ஊமையாக்க முடியாது’ என்று அறைகூவல்
விடுத்துத் தனது கருத்துரிமைக்கான போரை தொடர்ந்து நடத்தி வருகிறார். அவரது அந்த கருத்துரிமைப் போருக்கு
மரியாதை அளிக்கும் விதமாகவும் அவரது வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வினை பொது மக்கள்
மத்தியில் உருவாக்கிடவும் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
தஸ்லிமா நஸ்ரின் வங்காளதேசத்தில் மைமென்சிங் என்ற இடத்தில் பிறந்தவர். ஒரு மருத்துவரும்
பேராசிரியருமான தந்தையின் மகளாவார். இவரும் மருத்துவரே. ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த தஸ்லிமா
தன்னை ஒரு நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டதுடன் பெண்களின் சம உரிமைக்கும் குரல் கொடுப்பவராக
விளங்கினார். அத்துடன் அவர்களது நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியரல்லாத சமூகத்தவரை
அந்த நாட்டில் கொடுமைக்குள்ளாக்குவது பற்றி விமர்சனக் கருத்து கொண்டிருந்தார். அதனை எதிர்க்கவும்
தலைப்பட்டார். மேலும் தனது இளவயதில் தனது உறவினர்களாலேயே தான் பாலியல் கொடுமைக்காளாக்கப்பட்டதாகத்
தெரிவிக்கும் தஸ்லிமா நஸ்ரின் மிகத் தீவிரமான பெண்ணியவாதியாக தன்னை வளர்த்துக் கொண்டார். ஒரு கவிஞராகவும்
கட்டுரையாளராகவும் துவக்கத்தில் அறியப்பட்ட இவர் விரைவிலேயே மதத்தின் மீதும் குறிப்பாக இஸ்லாமிய மதத்தின்
மீதும் வைத்த கடுமையான விமர்சனக் கண்ணோட்டங்களால் பரபரப்பான அவதூ றுகளுக்காளானார்.
1993-ல் இவர் இஸ்லாமிய சமூகத்தில் நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து தொடர்ந்து பத்திரிகைகளில்
எழுதத் துவங்கினார். இதனால் மதவாதிகளின் கடுங்கோபத்துக்காளானார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மத
அடிப்படைவாதிகள் இவருக்கு ‘பஃட்வா’ என்றழைக்கப்படும் மரண தண்டனையை அறிவித்ததுடன் இவரது உயிரை
எடுப்போருக்கு பரிசளிப்பது என்ற அறிவிப்பினை வெளியிட்டனர். இக்கொடூரம் நாகரீக உணர்வு படைத்த சராசரி
மனிதர்களையும் பகுத்தறிவுள்ளமும் நாத்திக சிந்தனையுங் கொண்ட பண்பாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அப்போது நாங்கள் நடத்திக் கொண்டிருந்த புதியகுரல் இதழை நாங்கள் ‘தஸ்லிமா சிறப்பிதழாக’ வெளியிட்டோம்.
ஆனால் அன்று நாங்கள் குரல் கொடுத்தது இந்தியாவிற்கு வெளியில் நடந்த ஒரு கொடுமைக்காக. ஆனால் இன்று
அந்தக் கொடுமை வளர்ந்து இந்தியாவிலேயே நடக்குமளவுக்காகி விட்டது. அதன்பின் வங்காள தேச அரசு அவருடைய
நூலாகிய ‘லஜ்ஜா’விற்கு தடை விதித்ததுடன் அவரது கடவுச் சீட்டு உரிமையையும் முடக்கிப் போட்டது. அவரைக்
கொலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஆனால் தஸ்லிமா என்ற அந்த அதிசயப் பெண் அவையெதற்கும்
அசரவேயில்லை. மாறாக, ‘ பெண்களுக்கெதிராக இருக்கும் உங்கள் குரானை மறுவாசிப்பு செய்து திருத்தி எழுதுங்கள்’
என்று அறிவார்ந்த துணிச்சலுடன் தொடர்ந்து தனது கருத்துரிமையை நிலைநிறுத்தப் போராடலானார். அவரைக்
கொலை செய்ய வேண்டும் என்று அறிவித்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத வங்கதேச அரசு தஸ்லிமா
மீது அவதூறு வழக்கு பதிவு செய்து அவருக்கு வாரண்டு பிறப்பித்தது. இரண்டாண்டுகள் வரை தனக்கு சிறைத்
தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த தஸ்லிமா அதற்கும் மேலாக சிறையி லேயே தான் கொல்லப்பட்டு
விடக் கூடும் என்று நியாயமாக அஞ்சினார். எனவே அவர் தலைமறைவானார். இதன்பின் இரண்டு மாதங்கள்
கழித்து சர்வ தேச மனித உரிமை நிறுவனங்களாகிய ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ மற்றும் ‘பென்’ ஆகிய
நிறுவனங்களின் உதவியுடன் அவருக்கு பிணையில் விடுதலையளிக்கப்பட்டு அவர் அந்நாட்டை விட்டு வெளியேறிச்
செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
முதலாவதாக அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு சுவீடன். அதன்பின் ஜெர்மன், மற்றும் அமெரிக்காவில்
அவர் தங்கியிருந்த விட்டு அதன்பின் இந்தியாவில் கல்கத்தாவில் குடியேறினார். தாய் மண் கொடூர முகங் கொண்டு
நின்றாலும் உலகெங்கிலும் தஸ்லிமாவுக்கு ஆதரவுக் குரல்கள் மேலோங்கின. அய்ரோப்பிய பாராளுமன்றம் அவருக்கு
சுதந்திர சிந்தனைக்கான ‘சக்காரோவ்’ விருதினையும் இன்னும் பல விருதுகளையும் அறிவித்து பெருமைப்படுத்தியது.
அவரது நூல்கள் இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன்,
நார்வே, பங் களாதேஷ் இந்தி யா மற்றும் பல அய்க்கிய நாட்டு நிறுவனங் கள் இவரது சிந்தனைக்கும் எழுத்துக்கும்
பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்துள்ளன. சர்வதேச மதச்சார்பற்ற மற்றும் நாத்திக அமைப்பும் இவருக்கு
பாராட்டி விருது வழங்கியுள்ளது. இவ்வளவுக்குப் பின்னும் அவரது உயிருக்கும் இருத்தலுக்குமான போராட்டம்
தொடர்கிறது என்பதுதான் மிகப் பெரிய வேதனையாகும். அவரது சுயசரிதையின் நான்கு பாகங்கள் வங்காள தேச
அரசால் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பவை என்று தடை செய்யப் பட்டிருக்கின்றன. இந்தியாவின் மேற்கு
வங்க அரசும் தஸ்லிமாவின் வாழ்க்கை வரலாற்றின் மூன்றாவது பாகத்தைத் தடை செய்திருக்கிறது. ஆனால் உச்ச
நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கு வஙக்த்தில் அவர்
தொடர்ந்து தங்கக் கூடாதென்றும் ஆறு மாதங்களில் வெளியேறிவிட வேண்டுமென்றும் ஏற்கனவே தெரியப்படுத்தப்
பட்டுள்ளது. அவர் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் இந்திய அரசு அவருக்குக் குடியுரிமை வழங்க மறுத்து விட்டது.
கல்கத்தாவில் இருப்பது தனது சொந்த மண்ணில் இருக்கும் உணர்வைத் தனக்கு தருவதாகவும் எனவே இங்கேயே
தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாகவும் தஸ்லிமா தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அரசு அவருடைய
கோரிக்கைக்கு இன்று வரை இணங்கவில்லை.
இவரது எழுத்துக்கள் மிகவும் உணர்ச்சி நிரம்பியவையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவரது நூல்களின்
தலைப்புகளே சாட் சியாக உள்ளன:
இவரது கட்டுரைகளின் தலைப்புகள்
1. தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகள் (ஷிமீறீமீநீtமீபீ சிஷீறீuனீஸீs)
2. நான் போக மாட்டேன், ஏன் போக வேண்டும்? (மி ஷ்வீறீறீ ஸீஷீt ரீஷீ; ஷ்லீஹ் sலீஷீuறீபீ மி?)
3, தூய்மையற்ற ஒரு சிறுமியின் தூ ய்மையற்ற கவிதைகள் (மினீஜீuக்ஷீமீ ஜீக்ஷீஷீsமீ ஷீயீ ணீஸீ வீனீஜீuக்ஷீமீ ரீவீக்ஷீறீ)
4. சிறிய சோகக் கதைகள் (sனீணீறீறீ sணீபீ stஷீக்ஷீவீமீs)
நாவல்கள்
1. எதிர்ப்பு - 1992 (ளிஜீஜீஷீsவீtவீஷீஸீ)
2, பழி - 1992 (ஸிமீஸ்மீஸீரீமீ)
3. அழைப்பு - 1993 (மிஸீஸ்வீtணீtவீஷீஸீ)
4. திரும்புதல் - 1993 (ஸிமீtuக்ஷீஸீ)
5. அவனிடம் அந்த இரகசியத்தை சொல்லுங் கள் - 1994 (ஜிமீறீறீ பிவீனீ ஜிலீமீ ஷிமீநீக்ஷீமீt)
6. அவமானம் (லஜ்ஜா) (ஷிலீணீனீமீ)
சுயசரிதை தொடர்கள்
1, எனது குழந்தைப் பருவம் 1999 (விஹ் நிவீக்ஷீறீலீஷீஷீபீ)
2. சூறாவளி 2002 (கீவீறீபீ கீவீஸீபீ)
3. பேசு 2003 (ஷிஜீமீணீளீ ஹிஜீ)
4. இரண்டாகப் பிரிதல் 2003 (ஷிஜீறீவீt வீஸீ ஜிஷ்ஷீ)
5. அந்த இருண்ட நாட்கள் 2004 (ஜிலீஷீsமீ ஞிணீக்ஷீளீ ஞிணீஹ்s)
6, இஸ்லாமிய சமூகத்தில் வளர்கின்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாறு கி விமீனீஷீவீக்ஷீ ஷீயீ நிக்ஷீஷீஷ்வீஸீரீ ஹிஜீ திமீனீணீறீமீ
வீஸீ ணீ விusறீவீனீ கீஷீக்ஷீறீபீ
7. நான் நலமாக இல்லை ஆனால் நான் நேசிக்கும் எனது நாடே நீ நலம் பெறுக 2006 (மி கினீ ழிஷீt திவீஸீமீ, ஙிut சீஷீu
ஷிtணீஹ் கீமீறீறீ விஹ் ஙிமீறீஷீஸ்மீபீ சிஷீuஸீtக்ஷீஹ்)
மனித இன வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக நடந்து வந்திருக்கும் போராட்டம் மதத்திற்கும் சுதந்திர
சிந்தனைக்குமிடையிலான போராட்டம்தான். மதத்தை எதிர்க்காத யாரிடமிருந்தும் இதுவரை மனித இன
விடுதலைக்கான எந்தவொரு தத்துவமும் பிறக்கவில்லை. சிந்தனைக்கான விடுதலையே பிற விடுதலைச்
சிந்தனைகளுக்கான கருவறையாகும். இந்தப் போராட்டத்தில்தமான் தஸ்லிமாவும் தன்னை அய்க்கியப் படுத்திக்
கொண்டிருக்கிறார். இதனை அவர் வார்த்தைகளிலேயே காண்போம்.
“ஒரு மதம் தனக்கு மாறுபட்ட கருத்துக்களுள்ள மனிதர்களை துன்புறுத்துமேயானால். ஒரு
மதம் தனது சமுதாயப் பெண்களை அடிமையாக்குமேயானால் , ஒரு மதம் தனது மக்களை
அறியாமையில் வைத்திருக்குமேயானால், அது எந்த மதமாக இருந்தாலும் அதனை நான் ஏற்றுக்
கொள்ள முடியாது.
மனித சமுதாயம் நிச்சயமற்ற எதிர்காலத்தை சந்தித்துக் கொண் டிருக்கிறது. புதிய முரண்
பாடுகள் மற்றும் போட்டிகளுக்கான தளம் விரிவடைந்து கொண்டே போகிறது. இன்றைய மனித
இனத்தின் முக்கிய முரண்பாடு இரண்டு கருத்தியல்களுக்கிடையில்தான் இருக்கிறது. அது
என்னவெனில் மதச்சார்பின்மைக்கும் மத அடிப்படைவாதத்திற்குமான முரண்பாடுதான்.
இம்முரண்பாடானது ஏதோ இரண்டு மதங்களுக்கிடையிலான கிறித்துவத்துக்கும் இஸ்வா£த்துக்குமான
அல்லது ஜு டோயிசத்துக்கும் இஸ்லாத்துக்குமான பிரச்சனை என யாராவது கூறினால் அதை நான்
ஒத்துக் கொள்ள மாட்டேன். அனைத்து மதங்களிலுமே மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள்.
மத்திய யுகத்தின் புனிதப் போர்கள் மீண்டும் நடைபெறப் போவதாக சிலர் கூறுவதை நான் ஏற்றுக்
கொள்ளவில்லை. மேலும் இம்முரண் பாடானது மேற்கத்திய நாடுகளுக்கும் கீழை
நாடுகளுக்கிடையிலானதுமல்ல.
என்னைப் பொறுத்தவரையில் இம்முரண்பாடானது அடிப்படையில் நவீன தர்க்கவியல்
பகுத்தறிவுவாதத்துக்கும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைக்குமிடையிலானதுதான்.
இம்முரண்பாடானது பண்பட்ட நாகரீக சிந்தனைக்கும் அதற்து எதிரான சிந்தனைக்கும்
இடையிலானதுதான். சிலர் முன்னோக்கிச் செல்ல முற்படும்போது சிலர் பின்னோக்கி இழு க்கிறார்கள்.
இது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான, கண்டுபிடிப்புகளுக்கும் மரபுகளுக்குமான,
சுதந்திரத்தை மதிப்பவர்களுக்கும் அதனை மதிக்காதவர்களுக்குமான போராட்டம்.
தஸ்லிமாவின் இவ்வாக்கியஙக்ள் வரலாற்றின் மிக நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சியில் அவர் நிற்கிறார்
என்பதை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் நமது உள்நாட்டுச் சூ ழல்களில் எந்த அரசியல் நிலைப்பாடு நாம்
எடுத்தாலும் உலக மனித இன வரலாறு தொடர்ந்து சந்தித்து வரும் இந்த போராட்டத்தில் நாம் நிற்க வேண்டிய
இடத்தையும் அதன் தேவையையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
உலகின் அனைத்து மக்களுக்குமான கருத்துரிமைக்கும் சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்காகவும் தான்
போராடுவதாக அறிவிக்கும் தஸ்லிமா எது வந்த போதிலும் தன்னுடைய மரணம் வரை தான் தொடர்ந்து குரல்
கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன் என்னை யாரும் ஊமையாக்கி விட முடியாது என்று பறையறிவிக்கிறார்.
அந்தக் குரலே நம்முடையதாகவும் இருக்கட்டும்.
தஸ்லிமா நம்மவர்
தஸ்லிமா நஸ்ரின் ஒரு நாத்திகர்.
தஸ்லிமா நஸ்ரின் ஒரு மத எதிர்ப்பாளர்.
எப்படி தலைவர் பெரியார் அவர்கள் நான் பிறந்த நாட்டின் மதமாகிய இந்து மதம்தான் எனது முதல் இலக்கு பிற
மதங் கள் அதற்குப் பிறகுதான் என்று தனது எதிர்ப்பை வரிசைப்படுத்தினாரோ அதே நிலையில்தான் தஸ்லிமாவும்
தனது மக்களை நசுக்கிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மதத்தை தனது முதல் இலக்காகக் கொண்டிருக்கிறார். நமக்கு
எப்படியோ அப்படித்தான் அவருக்கும்.
தஸ்லிமா நஸ்ரின் ஒரு பெண்ணியவாதி
தனது சமுதாயப் பெண்களின் உரிமைகளுக்காக தனது நாட்டையே எதிர்த்து போராடிக் கொண்டிருப்பவர்.
நாத்திகர்கள், மத எதிர்ப்பாளர்கள், பெண்ணியவாதிகள் உலகளாவிய மாந்தர்கள். காலத்தின்
முன்னோடிகள். தேசஙக்ள் துரத்தட்டுமே. எதிர்காலம் இவர்களுக்கானது. தோற்கப் போவது
இந்தத் தேசஙக்ள்தான். மனிதத்துக்கும் மதத்திற்குமான போராட்டம் புதிதல்ல. அதில்
மதங்கள்தான் எப்போதும் தோற்கும் என்பதும் புதிதல்ல. அதுதான் வரலாறு.

நன்றி.... சிந்தனையாளன் திங்களிதழ்

No comments: